Friday, 24 January 2014

தமிழ் நாடு உழவர் சங்கம் விழிப்புணர்வு நாட்டு புற பாடல்!


"உழவர் உரிமை" என்னும் கோப்பில் இருந்து இந்த பாடல் ஒரு சில வரிகள்...

காலாற மடை திறந்து கழனி எல்லாம் விதை விதைச்சு,
கை சிவக்க கதிர் அறுத்து மலை போல போர் குவிச்சு,
மாடு கட்டி போர் அடிச்சா மாலாது சென்னல் நெல்லு, யானை கட்டி போர் அடிச்ச
சோழ நாட்டுல இன்று சோற்றுக்கு வழி இல்லைனு சொல்லு பாட்டுல! (2)

ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு ஆள கடிச்சது போல,
ஊர கடிச்சு நாட்டை கடிச்சு உசுர கடிச்சது போல,
இல்லாம போனததையா விவசாயம், இனி எப்படிதான் வாழும் இந்த சமுதாயம்? (2)

நெல்லு விதைச்சவன் சோளம் விதைச்சவன் சோகம் விதைச்சது போல,
வாய்க்கால் விதைசசவன் தினம் வயிறு வாடுவது போல,
பொய்யாகி போனததையா விவசாயம், இனி போராட வேண்டாமா சமுதாயம்? (2)

Thursday, 9 January 2014

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

ஐயா அவர்களின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டும், அவருடைய வனகம் வேளான் தொண்டு நிறுவனத்தில் ஒரு வாரம் தங்கி இருந்து இனிய நாட்களை மறக்க என்னால் இயலாது!

30 December 2013 அவரது மறைவு அனைவருக்கும் ஆழ்ந்த தும்பமே!

- என்றும் நம்மாழ்வார் ஐயாவீன் அன்பு சீடன் ராஜூ


Saturday, 21 December 2013

அறிமுகம்

கிராமியம் - நாட்டுப்புற பயணம்

அ) வயலும் வாழ்வும் - உழவு, நெசவு, காதி, சுதேசி பொருட்கள், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் இயற்கை விங்ஞானம்.

ஆ) உணவே மருந்து - பாரம்பரிய இயற்கை உணவுகள், சிறுதானிய உணவுகள், மூலிகை உணவுகள் மற்றும் சித்தா மருத்துவம்.

இ) மண் வாசனை - முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) வர்மம், சிலம்பம், குத்துவரிசை, யோகசானம், நாட்டுப்புற பாடல் , கிராமிய கலைகள், பாரம்பரிய விளையாட்டுகள், காவல் தெய்வங்கள், ஆன்மீக வழிபாடுகளும் சடங்குகளும், தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரங்கள்.

ஈ) நமது பாரதம் - இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் அதன் சட்ட திட்டங்களும், விடுதலை போராட்டங்களும் வீரர்களின் சாதனைகளும் மற்றும் இந்திய வரலாறுகள்.

என் வாழ் நாள் முழுவதும் கற்க்கும், முயற்சிக்கும், உணரும் கிராமத்து கலாச்சாரம், கிராம வளர்ச்சி திட்டம், கிராமிய வாழ்வியல் தமிழர் பாரம்பரியம், ஆன்மிகம், பண்பாடு போன்ற நல்ல கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டு செல்ல இந்த "கிராமியம்" எனும் “நாட்டுப்புற பயணம்” மக்களின் ஆதாரவொடு மக்களுக்காக இயங்கும் ஒரு தனி மனித ஆய்வுப்பபணியே...!!!

இப்படிக்கு அன்புள்ள தமிழன் 

பா.ராஜு  (ராஜு  பாக்கியநாதன்)